LATEST NEWS
“என் ஆட்சியிலேயே லஞ்சமா?” தவெக அமைச்சர்கள் மீது கிளம்பிய ஊழல் புகார்… 5 பேர் பதவி பறிப்பு..? முதல்வர் விஜய் ஆக்ஷன்..!!
தமிழக வெற்றிக் கழக அரசில் ஊழலுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில், தற்பொழுது சில அமைச்சர்கள் மீது லஞ்சப் புகார்கள் எழத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அமைச்சர்கள் கீர்த்தனா, பர்வேஸ், அருண்ராஜ், கமலி உள்ளிட்ட 5 பேருக்கு நெருக்கமானவர்கள், அரசு டெண்டர்கள் முதல் பணி நியமனங்கள் வரை பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுப் பணம் பெறுவதாகக் கோட்டை வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
அமைச்சர்கள் மீதான இந்த லஞ்சப் புகார்களை அடுத்து, முதலமைச்சர் விஜய் தவெக அமைச்சர்களின் கடந்த 3 மாத காலச் செயல்பாடுகள் குறித்து தீவிரமாக மதிப்பீடு செய்ய உள்ளார். இந்த ஆய்வின் முடிவில் முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கண்டறியப்படும் பட்சத்தில், குற்றம் சாட்டப்பட்ட அந்த 5 அமைச்சர்களின் பதவி அதிரடியாகப் பறிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
