LATEST NEWS
“உங்கள் மூளையை செயலிழக்க வைக்கும் சாட்ஜிபிடி” AI கருவிகளால் மனிதர்களுக்கு ஏற்படும் தீவிர ஞாபக மறதி… அதிரவைக்கும் சர்வதேச ஆய்வுகள்..!!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சாட்ஜிபிடி, ஜெமினி போன்ற AI கருவிகளின் அதீத பயன்பாடு, மனிதர்களின் நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறனைப் பாதிப்பதாக சர்வதேச ஆய்வுகள் எச்சரிக்கின்றன. அன்றாடப் பணிகளுக்கு மூளையைப் பயன்படுத்தாமல் AI-ஐச் சார்ந்திருக்கும்போது, “அறிவாற்றல் இறக்கம்” (Cognitive Offloading) ஏற்பட்டு மூளையின் செயல்பாட்டுத் திறன் குறைகிறது.
குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கல்வியில் AI-ஐக் முழுமையாகச் சார்ந்திருப்பது, அவர்களின் சுயமான சிந்திக்கும் திறனையும் ஆழமான நினைவாற்றலையும் வளரவிடாமல் தடுக்கிறது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதற்கொரு தீர்வாக, AI-ஐ ஒரு ஊன்றுகோலாகப் பயன்படுத்தாமல், கடினமான பணிகளை மூளைக்குக் கொடுத்துச் செய்து பழகி, சரிபார்ப்பதற்கு மட்டுமே உதவியாகப் பயன்படுத்த வேண்டும்.
