LATEST NEWS
மாறி மாறி பேசும் திருமாவளவன்… தவெக தலைமையில் கூட்டணி அமையும்… குழப்பத்தில் திமுக…!!
திருவாரூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி மற்றும் கூட்டணி குறித்துப் பேசியுள்ளார். தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், அது மக்களின் கட்டளை என்பதால் இந்த ஆட்சி கவிழ எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சனாதன சக்திகளை எதிர்க்கும் வரை மட்டுமே தங்களுக்கு திமுகவுடன் நட்பு இருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
கூட்டணி விவகாரம் குறித்துப் பேசிய அவர், தவெக உடன் தற்போது அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ளதாகவும், கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் தவெக தலைமையில் ஒரு புதிய கூட்டணி அமையும் என்றும் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போதைய தமிழக அரசியல் சூழலில், தவெக ஆட்சி நிலைத்திருப்பது மற்றும் புதிய கூட்டணி உருவாக்கம் குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது
