LATEST NEWS
டாஸ்மாக் பார் முறைகேடு வழக்கு.. ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரருக்கு லுக்அவுட் நோட்டீஸ்.. லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்தடுத்த அதிரடி பாய்ச்சல்..!!!
மிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பார் டெண்டர் முறைகேடுகள் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில், ஐபிஎஸ் சகோதரரான ரதேஷ்ராஜ் சண்முகவேலுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறைலுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், இவர் முக்கிய இடைத்தரகராகச் செயல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது தலைமறைவாகள்ள ரதேஷ்ராஜ் சண்முகவேல் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அவரைப் பிடிக்கத் தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பெரும் நிதி முறைகேடுகளில் தொடர்புடையவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டதால், இந்த வழக்கில் மேலும் பல முக்கிய உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
