“பாவம் சார் நேபாள் மக்கள்” இந்த காசை வச்சிக்கோங்க… உண்டியலை உடைத்து பணத்தை கொடுத்த 6 வயது சிறுவன்… கலெக்டரையே நெகிழ வைத்த மனிதநேயம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பாவம் சார் நேபாள் மக்கள்” இந்த காசை வச்சிக்கோங்க… உண்டியலை உடைத்து பணத்தை கொடுத்த 6 வயது சிறுவன்… கலெக்டரையே நெகிழ வைத்த மனிதநேயம்..!!

Published

on

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அர்பாஸ் ஷேக், தான் கடந்த ஓராண்டாகச் சேர்த்து வைத்த ரூ.4,115 உண்டியல் சேமிப்பை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். தொலைக்காட்சி மற்றும் செய்திகளில் நேபாள வெள்ளப் பாதிப்புகளைக் கண்டு மனம் உருகிய அந்தச் சிறுவன், தன் சேமிப்பு முழுவதையும் மாவட்ட ஆட்சியர் மகேந்திர சிங் தன்வரிடம் நேரடியாகச் சென்று ஒப்படைத்தார்.

சிறுவனின் இந்தத் தாராள மனப்பான்மையையும் மனிதநேயத்தையும் நேரில் கண்ட மாவட்ட ஆட்சியர் அர்பாஸ் ஷேக்கை மனமாரப் பாராட்டினார். இவ்வளவு சிறிய வயதில் பிறர் துயர் துடைக்க முன்வந்த சிறுவனின் இந்த நெகிழ்ச்சியான செயல், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிப் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. மனிதநேயத்திற்கு வயது ஒரு தடையல்ல என்பதை இந்தச் சிறுவன் தனது செயல் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளதாகப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in