Uncategorized
தந்தை எஸ்.பி.பி-யை தொடர்ந்து தன் அம்மாவின் உடல் நிலை குறித்து மகன் சரண் வெளியிட்ட முக்கிய தகவல் இதோ..!
பிரபல பாடகர் எஸ். பி.பி பாலசுப்பரமணியத்துக்கு, கொ ரோ னா வை ரஸ் பா திக்கப்ப ட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்ல படியாக ஒ த்து ழைத்து வந்த அவருடைய உடல் நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோ சம டை ந்தது. இதையடுத்து, தினமும் அவருடைய உடல் நிலை குறித்து எஸ்.பி.பி.யின் மகன் சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார்.
அதன் படி தற்போது எஸ்பிபி சரண், தந்தையின் உடல் நிலை குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், முதலில், என் அம்மா நலமாக இருக்கிறார்.
நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். நன்றாகத் தேறி வருகிறார். பலர் என் அம்மாவைப் பற்றி விசாரித்ததால் இதைச் சொல்கிறேன். வீட்டுக்குத் திரும்பிவிட்டார். நேற்றும் இன்றும் அப்பாவைப் பார்க்க மருத்துவமனை சென்றிருந்தேன்.
அப்பாவின் ஆரோக்கியம் குறித்து ஒவ்வொரு நாளும் மருத்துவர்கள் என்னிடம் ப கிர் ந்து வருகின்றனர். அப்பாவின் X-ray-வை என்னிடம் காட்டினார்கள். நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
அப்பா பிஸியோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். நீண்ட நாட்கள் ப டுக்கையிலேயே இருந்ததால் தசைகள் வலுப் பெற நிறைய உடற்பயிற்சி செய்து வருகிறார். அவரது சுவாசமும் சற்று சீ ரா கியுள்ளது. எனவே அவரது நிலையில் நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது.
மேலும், உங்கள் பிரார்த்தனைகளுடன் அப்பா இதிலிருந்து விரைவில் மீண்டு வருவார், வீடு திரும்புவார் என்று நான் நம்புகிறேன். மீண்டும் உங்கள் அனைவரின் அன்பு, அக்கறை, பிரார்த்தனைகளுக்கு நன்றி. உங்களுக்கு நாங்கள் கடன் ப ட்டி ருக்கிறோம்” இவ்வாறு எஸ்பிபி.சரண் தெரிவித்துள்ளார்.
