Uncategorized
அடிக்கடி உடல் மரத்துப் போவதாக உணர்ந்த இளைஞர்..! – பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அ தி ர் ச் சி..!
சீனாவில் இளைஞர் ஒருவரின் மூளைக்குள் உயிருடன் இருந்த ஐந்து அங்குல புழுவை மருத்துவர்கள் 17 ஆண்டுகளுக்கு பின்னர் அப்புறப்படுத்தியுள்ளனர்.
23 வயதாகும் அந்த சீனத்து இளைஞரின் கை, கால்கள் அடிக்கடி மரத்துப் போவது போன்ற உணர்வு ஏற்பட்டு வந்துள்ளது.
இது அவரது 6 வயதில் இருந்தே தொடர்ந்துள்ளது. இறுதியில் அவரது மேல் உடலின் வலது பாதியில் உணர்வை இழந்த நிலையில் மருத்துவர்களின் ஆலோசனையை நாட அவர் விரும்பியுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தவளை அல்லது பாம்பு உள்ளிட்டவையை பாதி சமைத்து அல்லது பச்சையாகவே சாப்பிட்ட காரணத்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அவரது மூளையில் இருந்து 5 அங்குலம் கொண்ட புழுவை அப்புறப்படுத்தியுள்ளனர்.
கடந்த 17 ஆண்டுகளாக தலைவலி மற்றும் குமட்டல் காரணமாக அவதிப்பட்டு வந்ததாகவும், அடிக்கடி தமது கை, கால்கள் மரத்துப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது அவரது மூளையில் இருந்து வெற்றிகரமாக புழுவை நீக்கிய பின்னர் அவர் குணமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
