உங்கள் கையில் இந்த குறியீடு இருந்தால் எம்புட்டு அதிர்ஷ்டம் தெரியுமா..? – cinefeeds
Connect with us

Uncategorized

உங்கள் கையில் இந்த குறியீடு இருந்தால் எம்புட்டு அதிர்ஷ்டம் தெரியுமா..?

Published

on

உங்களுக்கு கைரேகை மீது நம்பிக்கை இருந்தால் உங்கள் கையில் உள்ள ஒவ்வொரு கோட்டிற்கும், ஒரு ரேகைக்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்பதை புரிந்துகொள்ளுங்கள். கையில் உள்ள ஒவ்வொரு கோட்டிற்கு ஒரு நோக்கமும் அவசியமும் இருக்கும். இதில் சில குறியீடுகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடும்.

கைரேகை ஆய்வுகளின் படி உங்கள் கைகளில் உள்ள ஐந்து குறியீடுகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடும். இந்த ஐந்து அறிகுறிகளில் ஏதெனும் ஒன்று உங்கள் கையில் இருந்தாலும் அது உங்களுக்கு அதிர்ஷ்டம்தான். இந்த ஒவ்வொரு குறியீடும் ஒருவரின் குணநலன் மற்றும் ஆளுமை பற்றி விளக்கும். மீன், கொடி, ஸ்வஸ்திக், தாமரை மற்றும் கோவில் போன்ற குறியீடுகள் அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதப்படுகிறது.

Advertisement

மீன் குறியீடு
கையில் இருக்கும் மீன் குறியீடு மகிழ்ச்சிக்கான குறியீடாக அறியப்படுகிறது. இது மிகவும் அபூர்வமான ஒரு குறியீடாகும். ஒருவேளை இந்த குறியீடு ஒருவர் கையில் இருந்தால் அவர்களை சுற்றி மகிழ்ச்சியும், வெற்றியும் எப்பொழுதும் இருக்கும். மேலும் இந்த மீன் சின்னம் வெளிநாட்டு பயணம், தகுதி மற்றும் மகத்தான செல்வத்தை குறிக்கும். இந்த குறியீடு கையில் உள்ளவர்கள் பெருந்தன்மை மிக்கவர்களாகவும், தானம் அதிகம் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

கொடி குறியீடு
கொடி குறியீடு இருப்பதும் அதிர்ஷ்டத்தின் அறிகுறி ஆகும். இந்த குறியீடு ஒருவர் கைகளில் இருந்தால் அவர்கள் மிகவும் புகழ்பெற்றவர்களாக இருப்பார்கள். புகழ் இவர்களுக்கு எந்த வழியில் வேண்டுமானாலும் வரலாம், அவர்கள் எந்த கலைத்துறையில் பங்கேற்றாலும் உலக அளவில் புகழ் பெறுவார்கள். இந்த நபர்கள் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டங்களில் வெற்றிகரமாக செயல்படுவார்கள்.

Advertisement

ஸ்வஸ்திக் குறியீடு
தங்கள் கைகளில் ஸ்வஸ்திக் குறியீடு உள்ளவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். அவர்களின் கடின உழைப்பும் , அர்ப்பணிப்பும் இவர்களை வாழ்க்கையின் உயரத்திற்கு அழைத்து செல்லும். அதேநேரம் ஸ்வஸ்திக் குறி விதி கோட்டின் மேல் இருந்தால் அவர்கள் அதீத திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

தாமரை குறியீடு
தாமரை என்பது செல்வத்தின் கடவுளான லக்ஷ்மியுடன் தொடர்புடைய ஒன்று எனவே தங்கள் கைகளில் தாமரை குறியீடு உள்ளவர்கள் அளவற்ற செல்வத்தை பெறக்கூடியவர்கள். தாமரை குறியீட்டை கைகளில் பெற்றவர்கள் மனதளவில் தூய்மை ஆனவர்களாகவும், ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் ஆசி பெற்றவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இவர்கள் ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர்களாகவும், அதில் குருவாகவும் திகழ்வார்கள்.

Advertisement

கோவில் குறியீடு
கைகளில் கோவில் குறியீடு உள்ளவர்கள் தூய்மை ஆனவர்களாகவும், குரு ஸ்தானத்திலும், சீர்திருத்தவாதிகளாகவும், அறிவார்ந்த நபர்களாகவும் இருப்பார்கள். இந்த அடையாளம் பெரும்பாலும் வியாழன் மேட்டின் உச்சியில் காணப்படுவதோடு அரிய அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்த அடையாளம் கைகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களாக இருப்பார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in