LATEST NEWS
750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!!
தென்னிந்திய சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகர் கைகலா சத்யநாராயணா. இவர் இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கி வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த அசத்தார். அது மட்டுமல்லாமல் புராணம் மற்றும் நாட்டுப்புற படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இவர் தற்போது வரை 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நீண்ட காலமாக வயோதிப நோயால் அவதிப்பட்ட வந்த இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இவர் இன்று காலை தன்னுடைய 87 வயதில் மரணம் அடைந்தார். இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
