TRENDING
போட்டியாளர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய பிக்பாஸ்…. இந்த வாரம் ஒரே ஜாலிதான்…. வெளியானது ப்ரோமோ….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த வாரம் மணிக்கூடு டாஸ்க் நடைபெறும் என்று பிக் பாஸ் அறிவித்துள்ளார்.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக போட்டியாளர்கள் அனைவரின் செல்ல பெயர்களை கூறி ப்ரீஸ் ரிலீஸ் டாஸ்க் ஆரம்பம் என்ற பிக் பாஸ் கூறியுள்ளார். அதனால் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு உள்ளனர். இதனைத் தொடர்ந்து அமுதவாணன் மற்றும் ஷிவின், மைனா ஆகியோரை பார்ப்பதற்கு அவர்கள் வீட்டில் இருந்து குடும்பத்தினர் வந்துள்ளனர். அது தொடர்பான முதல் ப்ரோமோ இன்று வெளியாகி உள்ளது.