LATEST NEWS
“காலையில் எழுந்தவுடன் நான் இதைத்தான் செய்வேன்”…. மார்னிங் ரொட்டீனை பகிர்ந்த சமந்தா…!!!
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது சிட்டாட்டல் வெப் சீரிஸில் இந்திய வெர்ஷன்-ஆன சிடோட்டல் ஹனி பனி என்ற சீரிஸில் நடித்து வருகின்றார். இயக்குனர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த நடிகை சமந்தா தெலுங்கிலும் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். இவர் நடிகர் நாகை சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இவரின் திருமண வாழ்க்கை நான்கு வருடங்களில் முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியிருந்த சமந்தா பின்னர் மையோசிட்டிஸ் என்ற நோய் காரணமாக பாதிக்கப்பட்டார். அதிலிருந்து மீண்டு வந்த இவர் இரண்டு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்தார். சாகுந்தலம், குஷி என இந்த இரண்டு படங்களும் அந்த அளவுக்கு வரவேற்பை கொடுக்கவில்லை.
தொடர்ந்து சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என தெரிவித்திருந்தார். சினிமாவில் இருந்து ஒதுங்கிய இவர் வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற விஷயங்களை செய்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த சமந்தா தான் காலையில் எழுந்ததும் ரெகுலராக என்ன செய்வேன் என்பதை குறித்து பகிர்ந்திருந்தார். அவர் கூறியதாவது காலையில் எழுந்ததும் சூரிய ஒளியில் சில நிமிடங்கள் இருப்பேன். பிறகு மூச்சுப் பயிற்சி எடுத்துவிட்டு 25 நிமிடம் மெடிடேஷன் செய்வேன். மேலும் கடந்த சில நாட்களாக டேப்பிங் தெரபி செய்து வருகிறேன். இது எனக்கு மிகவும் எனர்ஜியாக இருக்கின்றது என்று கூறியிருந்தார்.