LATEST NEWS
அடடே நடிகை திவ்யபாரதியா இது?…. கல்லூரி பருவத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி இருக்காங்களே….!!!!
தமிழ் சினிமாவில் மாடலாக வீடியோ வாழ்க்கையை தொடங்கி தற்போது ஹீரோயினியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திவ்யபாரதி. இவர் சிறுவயதில் நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தில் பல மாடல் போட்டிகளில் பங்கேற்று பட்டங்கள் வென்று அசத்தியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் போட்டோ சூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் மூலமாக இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி பேச்சுலர் திரைப்படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தில் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார் . தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் திவ்யபாரதி. மேலும் பிக் பாஸ் முகின் ராவ் ஹீரோவாக நடித்துள்ள மதில் மேல் பூனை என்ற திரைப்படத்தில் இவர் தான் ஹீரோயினியாக நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் திவ்யபாரதி அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் திவ்யபாரதி கல்லூரி படிக்கும் போது எடுத்த ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார்.
