LATEST NEWS
அச்சு அசல் அம்மாவை போலவே இருக்கும் நடிகை ரம்பாவின் மகள் பள்ளியில் வாங்கிய விருது…. வைரலாகும் புகைப்படங்கள்…!!
இந்திய சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரம்பா. தெலுங்கில் வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். அதனைப் போலவே தமிழ் சினிமாவில் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
இவர் விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இலங்கைத் தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகினார்.
இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது ரம்பா குழந்தைகள் மற்றும் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகின்றார். இந்நிலையில் ரம்பாவின் மகள் லாவண்யா பள்ளியில் பேச்சு போட்டியில் கலந்து கொண்டு பரிசு வாங்கியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமையுடன் ஷேர் செய்துள்ளார். புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
