LATEST NEWS
FLASH: “2000 பேரைக் குடித்த கொடூர வைரஸ்..!” உலக நாடுகளை உலுக்கிய அதிர்ச்சி தகவல்..!!
காங்கோ நாட்டில் மீண்டும் அதிவேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தாக்குதலால் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் முதல் இதுவரை சுமார் 4,381 பேருக்கு இந்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி 2,011 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், மேலும் பல உயிர்கள் பலியாவதைத் தடுக்கவும் உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு தீவிரத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இத்தகைய இக்கட்டான சூழலில், காங்கோவில் எபோலா வைரஸுடன் சேர்ந்து ‘பண்டிபுக்யோ’ என்ற மற்றொரு கொடிய வைரஸ் தொற்றும் இணைந்தே பரவி வருவதாக வெளியாகியுள்ள தகவல் மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு கொடூர வைரஸ்கள் பரவி வருவதால், அந்நாட்டில் சுகாதார அவசரநிலை போன்ற சூழல் உருவாகியுள்ளது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் விழிப்புணர்வுப் பணிகளும், பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தனிமைப்படுத்திச் சிகிச்சை அளிக்கும் தீவிர முயற்சிகளும் தற்பொழுது அங்கு நடைபெற்று வருகின்றன.
