LATEST NEWS
சினிமாவில் பயங்கர வில்லனாக மிரட்டிய பொன்னம்பலத்திற்கு இவ்வளவு அழகான மகளா?.. ஹீரோயினி போல் இருக்காங்களே..!!
தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் வில்லன் நடிகராக பிரகாசித்தவர் தான் பொன்னம்பலம். இவர் பெரும்பாலான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருப்பார். குறிப்பாக நாட்டாமை திரைப்படத்தில் இவர் கூறும் தாய்க்கிழவி வார்த்தை இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் என அனைத்து நடிகர்களுடனும் துணை கதாபாத்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவருக்கு சமீபத்தில் சிறுநீரக செயலிழப்பு இருந்ததால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது இவர் படங்களில் நடிப்பதில்லை. சென்னையில் உள்ள ஒரு வீட்டில் ஓய்வெடுத்து வரும் இவர் உடல்நலம் தேறி வருகின்றார்.
இந்நிலையில் பொன்னம்பலம் தேவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு கார்த்திக் என்ற மகனும் கிருத்திகா என்ற மகளும் உள்ளனர். தற்போது பொன்னம்பலத்தின் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
