CINEMA
என்னது? ஒரு காட்சியை எடுக்க 90 ரீ டேக்குகள் எடுக்கப்பட்டதா? அந்த சீன்ல நடிச்சவங்கள நெலமையை நெனைச்சு பார்த்தா ரொம்ப பரிதாபமா இருக்குதே? புலம்பிய ரசிகர்கள் – நடந்ததை சொன்ன மலையாள நடிகர் பிருத்விராஜ்!
பாகுபலி பட இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வாரணாசி திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதில் நடிகர் பிருத்விராஜ் வில்லனாக நடிக்கிறார். இந்த வாரணாசி படப்பிடிப்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில் பேசிய பிரித்விராஜ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து நடிகை பிருத்விராஜ் கூறுகையில், வாரணாசி பின்னணியில் ஒரு முக்கியமான காட்சியின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அந்த காட்சியை மட்டும் சரியாக கொண்டு வருவதற்காக சுமார் 90 முறை ரீ டேக் எடுக்க வேண்டி இருந்தது. காட்சி முழுமை பெறுவதற்காக இயக்குனர் ராஜமௌலி எவ்வளவு பொறுமையுடனும் நுணுக்கமாகவும் செயல்படுகிறார் என்பதை அவரிடம் பணிபுரியும் போது தான் உணர முடிகிறது என்று பிருத்விராஜ் பாராட்டி கூறியிருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் அந்த காட்சியை எடுக்க 90 முறை ரீ டேக் போகும் வரை அந்த காட்சியில் நடித்தவர்களின் மனநிலை என்ன என்பதுதான் பரிதாபமாக உள்ளது.
