குடும்பத்துடன் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய நடிகர் சரத்குமார்… வைரலாகும் புகைப்படங்கள்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

குடும்பத்துடன் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய நடிகர் சரத்குமார்… வைரலாகும் புகைப்படங்கள்..!!

Published

on

தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கியவர் சரத்குமார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பாடி பில்டர் ஆகவும் இருப்பவர்.

இவர் முதன் முதலில் கண் சிமிட்டும் நேரம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து சூரியன், வைதேகி கல்யாணம் மற்றும் சேரன் பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார்.

அந்தத் திரைப்படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தன. இதுவரை 130 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

Advertisement

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

சினிமா ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அரசியலிலும் திகழ்ந்தவர். 1974 ஆம் ஆண்டு 20 வது வயதில் மிஸ்டர் மெட்ராஸ் என்ற போட்டியில் கலந்துகொண்டு பட்டத்தை வென்றவர் சரத்குமார்.

Advertisement

அன்று முதல் இன்று வரை உடல் நலம் குறித்து உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.

இவரின் நடிப்புக்காக பல விருதுகளையும் கலைமாமணி பட்டத்தையும் பெற்றுள்ளார்.

Advertisement

இவர் இறுதியாக விஜயின் வாரிசு மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் சரத்குமார் தமிழக அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

Advertisement

இந்நிலையில் சரத்குமார் நேற்று தனது பிறந்த நாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in