CINEMA
என் போட்டோவை வச்சிருக்காங்க…. நான் அவ்ளோ அழகா…? ஆச்சர்யப்பட்ட சாய் பல்லவி..!!
தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார் சாய் பல்லவி.என்றும் பலர் அவரை மலர் டீச்சர் என்று தான் கூப்பிடுகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தி ஒரு பேட்டியில் பேசிய சாய் பல்லவி, Facebook ல நிறையபேர் display-ல என்னுடைய போட்டோவை வச்சிருந்தாங்க. அதை பார்த்ததும் ரொம்ப Excited ஆகிட்டேன். அவங்க நம்ம relative இல்ல ஆனா என்னோட போட்டோ வச்சிருக்காங்க. நாம அவ்ளோ அழகாவா இருக்கோம்னு நினைச்சேன் என்று கூறியுள்ளார்.