CINEMA
வழக்கம் போல இந்த முறையும் எட்டிப் பார்க்காத நடிகர் அஜீத்குமார், சினிமாவில் இருந்துக்கொண்டே அவர் இப்படி செய்வது நியாயம்தானா? – இது அவருக்கு அழகல்ல என விமர்சிக்கும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் மறைவுக்கு அஞ்சலி செலுத்த மம்முட்டி சுரேஷ்கோபி திலீப் போன்ற மலையாள நடிகர்கள் கூட வந்தனர் மேலும் சினிமா தொடர்பு இல்லாத பலரும் வந்தனர். அவருடைய திறமையை பார்த்து வியந்தவர்கள் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் உள்ள அனைவருமே வந்துவிட்டனர்.
அப்படி வரமுடியாதவர்கள் சூழ்நிலையை சுட்டிக்காட்டி வீடியோ மூலமும் பதிவுகளின் மூலமும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் அஜீத்குமார் ஒருவரை தவிர. ஒருவர் இறந்தால் இரங்கல் தெரிவிப்பது என்பது நற்பண்பு. சினிமா துறை சார்ந்த உச்சம் பெற்றவரின் இறப்பிற்கு கூட வராமல் இருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் கே பாக்யராஜ் மறைவுக்கு மட்டுமல்ல, இயக்குனர் இமயம் பாரதிராஜா பாடகர் எஸ்பிபி கேப்டன் விஜயகாந்த் நடிகர் விவேக் என பலரது இறப்பிற்கும் கூட அஜீத்குமார் நேரில் வரவில்லை. பாக்யராஜ் குடும்பமே சினிமா குடும்பம் தான். துணை நடிகர்கள் முதல் சின்ன சின்ன நடிகர்கள்கூட வந்தானர். ஆனால் அஜீத்குமார் வரவே இல்லை.
பொது விஷயங்களில் கலந்துக்கொள்ளாமல் இருப்பது அஜீத்குமாரின் தனிப்பட்ட குணமாக கூட இருக்கலாம். ஆனால் இப்படி எல்லா இறப்புகளிலும் ஒதுங்கி இருப்பது என்பது அவர் அடைந்திருக்கும் உச்சத்திற்கு அழகல்ல. நேரில் வராவிட்டாலும் ஒரு இரங்கல் தெரிவிப்பதில் அவருக்கு என்ன பிரச்னை வந்துவிடப் போகிறது என்று ரசிகர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
