LATEST NEWS
ராம் சரண் மகளுக்கு விலை உயர்ந்த பரிசை கொடுத்த அல்லு அர்ஜுன்… அப்படி என்ன கொடுத்தார் தெரியுமா..??

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சிரஞ்சீவி. இவரைப் போலவே அவரின் மகனும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது மகன் ராம்சரனை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் மற்றும் ஆச்சாரியா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தெலுங்கு சினிமாவில் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதனிடையே ராம்சரண் கடந்த 2012 ஆம் ஆண்டு உபசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் வாழ்ந்து வந்த நிலையில் ராம்சரண் மற்றும் உபசனா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில் சிரஞ்சீவி குடும்பமே தற்போது மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளது. திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் ராம்சரண் உபசனா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் அல்லு அர்ஜுன் ராம்சரண் மகளுக்கு பிரத்தியேகமாக க்ளின் காரா பெயர் மற்றும் பிறந்த விவரங்கள் பொறிக்கப்பட்ட தங்கத்தினாலான ஸ்லேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக அம்பானி ராம்சரண் மகளுக்கு ஒரு கோடி மதிப்பிலான தங்கத் தொட்டிலை பரிசாக வழங்கியிருந்த நிலையில் தற்போது அல்லு அர்ஜுன் பரிசாக தங்க ஸ்லேட் ஒன்றை கொடுத்துள்ளார்.