கணவருக்கு விலை உயர்ந்த பரிசை வழங்கிய ஆல்யா மானசா…. அது என்ன தெரியுமா?…. வைரலாகும் புகைப்படம்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கணவருக்கு விலை உயர்ந்த பரிசை வழங்கிய ஆல்யா மானசா…. அது என்ன தெரியுமா?…. வைரலாகும் புகைப்படம்….!!!!

Published

on

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா. அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர்.

மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அப்போது சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து மீண்டும் கர்ப்பம் ஆனதால் சீரியலில் இருந்து விலகிய இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

Advertisement

அதன் பிறகு தனது உடல் எடை கூடியதால் உடல் எடையை குறைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு தற்போது மீண்டும் புதிய சீரியலில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.இந்நிலையில் துபாய் சென்றுள்ள சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா புத்தாண்டை அங்கு கொண்டாடியுள்ளனர். அங்கு ஆல்யா மானசா தன்னுடைய கணவருக்கு விலை உயர்ந்த சூட்கேஸ் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அதனை புகைப்படம் எடுத்து சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய அது தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

sanjeev இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sanjeev_karthick)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in