LATEST NEWS
இரவோடு இரவாக அதிரகிரஹி..! தவெக MLA மீது வழக்கு பாய்ந்தது.. கைது உறுதி..!!
செய்தியாளர்களைத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ. கபில் மற்றும் அவரது சகோதரர் தனஞ்செழியன் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக, சுமார் 21 நாட்களுக்குப் பிறகு தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட செய்தியாளர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் இந்த வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், ஊடகத் துறையினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த வழக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. எம்.எல்.ஏ. கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையினர் அடுத்தகட்ட விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
