LATEST NEWS
“பதவியை ராஜினாமா செஞ்சுட்டு TVK-ல சேரு” – போலீஸ் மிரட்டியதாக திமுக அதிரடி குற்றச்சாட்டு.. திமுக MLA மார்க்கண்டேயன் ஆவேசம்!
தமிழ்நாட்டில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையி..லான தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது. அண்மையில், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ ஜி.வி. மார்க்கண்டேயன் மற்றும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்கண்டேயன், தங்களை திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணையச் சொல்லும் அரசியல் தகுதியோ அல்லது திறனோ ஆளுங்கட்சியினருக்கு இல்லை என மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி சுதீர் மற்றும் அவருடன் வந்த மற்றொரு நபர், தன்னை எம்.எல்.ஏ பதவியை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையுமாறு நேரடியாக மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையினர் ஆளுங்கட்சியின் ஏவலாளர்களாக மாறி தங்களை அச்சுறுத்துவதாகவும், தவெக அரசு அதிகார பலத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்கப் பார்ப்பதாகவும் திமுக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. காவல்துறை அதிகாரி மீது சுமத்தப்பட்டுள்ள இந்தத் தீவிரமான மிரட்டல் குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
