LATEST NEWS
என்னால அந்த மாதிரி எல்லாம் நடிக்க முடியாது..!தென்னிந்திய சினிமா விட்டு விலகிய தமன்னா..?? ஷாக்கான ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னாடி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தமன்னா. இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் ‘கல்லூரி’ என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். அதன் பிறகு சிறுத்தை, வீரம், தர்மதுரை, தேவி, ஸ்கெட்ச், சுறா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் nu kaavaalaa என்ற பாடலில் மட்டும் வந்து நடனமாடி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார். நடிகை தமன்னா தற்போது வெப் சீரியஸ்களில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். எதனால், தென் இந்திய படங்களில் இருந்து விலகி இருக்க காரணம் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் சில பார்முலாக்கள் இருக்கிறார்கள்.
அவை எளிதானவை. சில கமர்சியல் படங்களில் எனது கதாபாத்திரங்களுடன் என்னால் பொருந்த முடியவில்லை. இயக்குனர்களிடம் அதை குறைக்கும்படி கேட்டேன். சகிக்க முடியாத அளவுக்கு ஆணாதிக்கத்தை கொண்டாடும் படங்களில் நடிக்காமல் இருக்க முயற்சி செய்ய தொடங்கினேன். தமிழ் சினிமாவில் கிடைத்த வெற்றி எனக்கு ஹிந்தியில் கிடைக்கவில்லையா என்று கேட்கிறார்கள்.
ஒரு படம் உருவாவதற்கு பலரின் பங்களிப்பு அதில் உள்ளது அது என்னுடைய தனிப்பட்ட தோல்வியாக என்னால் எடுத்துக் கொள்ள முடியாது. அந்த வகையில் எனது வெற்றி தோல்வி இரண்டிலும் இருந்து விலகி இருக்கிறேன். சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் ஆகியுள்ளது. ஒவ்வொரு நாளும் கேமராவை எதிர்கொள்ளும் ஆசையுடன் எழுதுகிறேன். நடிக்க வேண்டும் என்ற ஆசை என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.