LATEST NEWS
“மாஜிக்களின் பினாமிகளை தூக்கி உள்ள போடுங்க” காஞ்சிபுரத்துல ஒரு சீட் கூட திமுக ஏன் ஜெயிக்கல தெரியுமா..? பேரவையில் வெடிக்குண்டைப் போட்ட தவெக அமைச்சர்…!
“முன்னாள் அமைச்சர்களின் பினாமிகளைக் கைது செய்ய வேண்டும்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் மிகக் கடுமையான மற்றும் அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுகவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும் இயற்கை வளச் சுரண்டல்களைச் சுட்டிக்காட்டி அவர் இந்த உரையை நிகழ்த்தினார்.
பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஆரம்பக் காலத்தில் வெறும் சைக்கிளில் சென்று அரசியல் செய்தவர்கள், தற்போது பல்லாயிரக்கணக்கான கோடிகளில் மருத்துவக் கல்லூரி கட்டியிருப்பது அப்பட்டமான ஊழல் என்று திமுகவின் முன்னாள் அமைச்சர்களை மறைமுகமாகச் சாடினார். பேரறிஞர் அண்ணா பிறந்த வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரத்தின் ஒரு தொகுதியில் கூட திமுகவினால் வெல்ல முடியாமல் போனதற்கு அவர்களின் இந்த அராஜக சுரண்டல்களே காரணம் என்றும், இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊழல் திமிங்கலங்களின் பின்னணியில் இருக்கும் பினாமிகளை முதலில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பினாமிகள் சிறைக்குச் சென்றால் மட்டுமே அவர்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான குற்றவாளிகள் பயந்து வெளியே ஓடி வருவார்கள் என்று பகிரங்கமாக முழங்கினார். தவெக அமைச்சரின் இந்த அனல் பறக்கும் ‘பினாமி அதிரடிப் பேச்சு’ சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி வரிசையினரிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், அரசியல் வட்டாரத்தில் புதிய பூகம்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
