LATEST NEWS
பசுமையான சூழலை உருவாக்கும் “மை ட்ரீ சேலஞ்ச்”…. மரக்கன்றுகளை நட்ட தமிழ் சினிமா பிரபலங்கள்…. வைரல் புகைப்படங்கள்….!!!
இந்தியாவில் தற்போது பசுமையான சூழலை உருவாக்கும் நோக்கத்தில் “மை ட்ரீ சேலஞ்ச்” என்று அழைக்கப்படும் மரக்கன்று நடும் போட்டி இந்தியாவில் நடிகர்கள் மத்தியில் பிரசித்தி பெற்று வருகின்றது.
முதன் முதலில் கேரளாவில் தொடங்கப்பட்ட இந்த புதிய முயற்சியை பிரபல நடிகரான மம்முட்டி தொடங்கி வைத்தார்.
அந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து பிரபல இந்திய நடிகர்கள் ஷாருக்கான், விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் பலரும் இந்த சவாலை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா இதற்கான சவாலை ஏற்றுக் கொண்டு மரக்கன்று நட்டார்.
அவரும் எதற்காக வீடியோ வெளியிட்ட நிலையில் இந்த சவாலை நடிகர்கள் அமீர்கான், மகேஷ் பாபு மற்றும் சுதீப் ஆகியோருக்கு விடுப்பதாக அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தார்.
உலகில் மக்களின் தேவைக்காக அளிக்கப்படும் காடுகள் மற்றும் மரங்களால் சுற்றுப்புற சூழல் பெரிதும் மாசுபடுகிறது.
அதனால் இதை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நிறைய மரக்கன்றுகளை மக்கள் நடுவதற்கு ஊக்கம் அளிக்கவும் நடிகர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர்.
இதுவரை தமிழ் சினிமா நடிகர்கள் பலரும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு மரங்களை நட்டு உள்ளனர்.
இவ்வாறு பிரசித்தி பெற்று வரும் இந்த சவால் நடிகர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் ரசிகர்கள் மத்தியிலும் வைரலாக பரவி வருகிறது.
இதனால் பொதுமக்கள் பலரும் தாங்களாக முன்வந்து மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரித்து வருகின்றனர்.
இந்தியா முழுவதும் இந்த சவால் வேகமாக பரப்பப்பட்டு வரும் நிலையில் பலரும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிவேகமாக பரவி வருகிறது.
