BREAKING : இலங்கை சிறையில் கலவரம்.. 25 பேர் உயிரிழப்பு.. சற்றுமுன் அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING : இலங்கை சிறையில் கலவரம்.. 25 பேர் உயிரிழப்பு.. சற்றுமுன் அதிர்ச்சி..!!

Published

on

இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் தற்பொழுது பெரும் கலவரமாக வெடித்துள்ளது . சிறையிலுள்ள இரு குழுக்களுக்கு இடையே நேற்று தொடங்கிய இந்த மோதல், இன்று மேலும் வலுப்பெற்று பெரும் வன்முறையாக மாறியுள்ளது . இந்தத் துரதிர்ஷ்டவசமான கலவரத்தில் 2 காவல் அதிகாரிகள் உட்பட மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன .

இந்தக் கொடூர வன்முறைச் சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து தற்பொழுது தீவிர மருத்துவச் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . சிறைக்குள் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதைத் தொடர்ந்து, அங்கு பதற்றத்தைத் தணிக்கக் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் இதற்கிடையே, கலவரச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கைதிகளின் உறவினர்கள் ஏராளமானோர் சிறைச்சாலைக்கு முன்பாகத் திரண்டுள்ளதால் அந்தப் பகுதியே பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in