விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது தமிழ் சினிமாவில் பாடகர்களாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் அஜய் கிருஷ்ணா.

உதித் நாராயணன் போலவே குரல் வளம் கொண்ட இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. கண்ணான கண்ணே என்ற பாடலை பாடி instagram பக்கத்தில் பதிவிட்ட போது ஒரு ரசிகையாக இந்த பாடலை பாராட்டி ஜெஸ்ஸி என்பவர் பதிவு போட்டார். அதற்கு அஜய் கிருஷ்ணா நன்றி தெரிவித்த நிலையில் அப்படியே இருவரும் பேசி பழகி காதலிக்க தொடங்கினர்.

பின்னர் நாளடைவில் திரு வீட்டார் சம்பந்தத்துடன் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் முடிந்த கையோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்கள்.

இந்நிலையில் இவர்களுக்கு சமீபத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அஜய் கிருஷ்ணாவின் மனைவி ஜெஸ்ஸி பிரசவ வழியில் துடித்தது முதல் கையில் குழந்தையை பெற்ற தருணம் வரை வீடியோவாக எடுத்து அதனை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Jessy Ajay✨ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@prathimma_jessy)