CRIME
பகீர்..! கட்டிலில் கிடந்த 20 வயது மனைவியின் சடலம்..! உடலை மறைக்கப் பார்த்த கணவனுக்கு நண்பன் வைத்த செக்..! அடுத்து நடந்த அதிர்ச்சி திருப்பம்..!!
தென்மேற்கு டெல்லியின் கிஷன்கர் பகுதியில் கணவன் தன் மனைவியைக் கொலை செய்துவிட்டு, உடலை மறைக்கத் திட்டமிட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவத்தில் 20 வயதான கனிகா என்பவர் உயிரிழந்தார். அவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது கணவர் 24 வயதான அனுராக் என்ற அபிஷேக், தொழிலில் டெலிவரி பாயாகப் பணியாற்றி வருகிறார். மனைவியைக் கொலை செய்த பிறகு, உடலை அப்புறப்படுத்தத் தன் நண்பனின் உதவியை அனுராக் கோரியுள்ளார்.
அனுராக் தன் வீட்டிற்கு அழைத்தபோது அங்கு சென்ற நண்பர், கட்டிலில் கனிகா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தான் மனைவியைக் கொன்றுவிட்டதாகவும், உடலை அப்புறப்படுத்த உதவுமாறும் அனுராக் அவரிடம் கேட்டுள்ளார். ஆனால், அந்த நண்பர் புத்திசாலித்தனமாக ஏதோ ஒரு சாக்குப்போக்கு கூறி அங்கிருந்து தப்பித்துச் சென்று, உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்தார். தகவல் கிடைத்ததும் கிஷன்கர் காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு அனுராக்கைக் கைது செய்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் கனிகாவின் உடலைக் கைப்பற்றி சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். 2023-இல் திருமணமான இத்தம்பதியரிடையே ஏற்பட்ட இக்கொலைச் சம்பவம் தொடர்பாகக் குற்றப்பிரிவு மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்துள்ளனர். இக்கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்துக் கிஷன்கர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அனுராக்கிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
