LATEST NEWS
15 ஆண்டுகளை நிறைவு செய்த சுப்பிரமணியபுரம்… மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட நடிகர் சசிகுமார்..!!
கடந்த 2008 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் நடிகர் ஜெய், சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு மற்றும் நடிகை சுவாதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சுப்பிரமணியபுரம். ஜேம்ஸ் வசந்த் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் இடம் பெற்ற கண்கள் இரண்டால், மதுர குலுங்க, ஆடுங்கடா உள்ளிட்ட பாடல்கள் அனைத்துமே அந்த காலகட்டத்தில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒழித்தன.
இன்னும் சொல்லப்போனால் தற்போது கூட இந்த பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனால் ரசிகர்கள் அனைவரும் திரைப்படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
அதன்படி இந்த திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆனதை சசிகுமார் தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அதேசமயம் தான் படம் இயக்க இருப்பதாகவும் மகிழ்ச்சியான தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
