LATEST NEWS
“முரசொலி மாறன் குறித்துப் பேச என்ன அவசியம்..? மீண்டும் மீண்டும் திமுக மீது குற்றம் சாட்டுவது அரசியல் ஆதாயமா..?” முதலமைச்சரின் முகத்திரையைக் கிழித்த கோவி. செழியன்.. கோட்டையில் வெடித்த விவாத புயல்..!!
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், திமுக சட்டமன்ற உறுப்பினர் கோவி. செழியன், மறைந்த தலைவர் முரசொலி மாறன் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதற்கு மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துக் கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் மாபெரும் விவாதப் புயலை வெடிக்கச் செய்துள்ளது. அமலாக்கத்துறை அரசியல் சார்பில் சமர்ப்பித்த ஆவணத்தை, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது ஒரு முதலமைச்சர் அதை ஆதாரமாக காட்டலாமா? சர்க்காரியா கமிஷனில் குற்றவாளியாக தீர்ப்பு அளிக்கப்படாத நிலையிலும், மீண்டும் மீண்டும் திமுக மீது குற்றஞ்சுமத்துவது அரசியல் ஆதாயம். மறைந்த தலைவர் முரசொலி மாறன் குறித்து முதலமைச்சர் பேச வேண்டிய அவசியம் என்ன?” என்று அவர் சட்டமன்றத்தில் மிக அனல் பறக்கக் கடுமையாகச் சாடியுள்ளார்.
திமுக சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அதிரடியான அடுக்கடுக்கான கேள்விகள், தமிழக கோட்டை வட்டாரத்தையே தற்பொழுது உலுக்கிப் போட்டுள்ளது. சர்க்காரியா கமிஷன் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஆவணங்களை முதலமைச்சர் விஜய் ஆதாரமாகக் காட்டியதை அரசியல் ஆதாயம் என அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்துள்ள கோவி. செழியனின் இந்தத் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
