LATEST NEWS
“மருத்துவமனையா இல்ல குப்பைத் தொட்டியா..? அரசின் பணத்தைக் கொள்ளையடிக்கிறீங்களா..?” இரவு 10 மணிக்கு திடீர் ரெய்டு விட்ட ஆட்சியர்..! கதறிய அதிகாரிகள்..!!
மத்தியப் பிரதேசத்தின் ரேவா நகரில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் தொடர்ந்து வெளிவந்த சீர்கேடுகள் மற்றும் அவல நிலைக்கு மத்தியில், ரேவா மாவட்ட ஆட்சியர் நரேந்திர குமார் சூரியவன்சி மற்றும் காவல் கண்காணிப்பாளர் குரு கரண் சிங் ஆகியோர் இரவு 10 மணியளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆட்சியர் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல வார்டுகளைப் பார்வையிட்டு, நோயாளிகளுக்குக் கிடைக்கும் மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவமனையின் பராமரிப்பு நிலையை ஆய்வு செய்தார். அப்போது அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே தூய்மையற்ற சூழல் நிலவுவதைக் கண்டு கடும் கோபமடைந்த ஆட்சியர், மருத்துவமனை நிர்வாகத்தைக் கடுமையாகக் கண்டித்தார்.
ஆய்வின் போது, நோயாளியுடன் ஒரே ஒரு உதவியாளர் மட்டுமே தங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி அனுமதியின்றி யாரையும் வார்டுகளுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் பொறுப்பு டீன் டாக்டர் மனோஜ் இந்துர்கருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், எலும்பியல் வார்டில் பழைய மெத்தைகள் திறந்தவெளியில் கிடப்பதைக் கண்ட ஆட்சியர், அதற்குப் பொறுப்பான இன்சார்ஜின் 7 நாள் ஊதியத்தைப் பிடிக்க உத்தரவிட்டார். அதோடு, வெளிமுகமை (Outsourcing) நிறுவன அதிகாரியைக் கண்டித்த ஆட்சியர், “உங்களிடம் 300 பணியாளர்கள் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், 190 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்; இது அரசின் பணம், கொள்ளையடிப்பதற்காக அல்ல” என்று சாடினார்.
https://www.facebook.com/reel/1503507098246859
தொடர்ந்து, மருத்துவமனையின் தூய்மைப் பணிகளுக்குப் பொறுப்பான முகமையைப் பார்த்துக் கோபமடைந்த ஆட்சியர், “மருத்துவமனையைக் குப்பைத் தொட்டியாக மாற்றி வைத்துள்ளீர்கள், உங்களுக்குச் சரியான பாடம் புகட்டுவேன்” எனக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். மேலும், , ஆட்சியர் அதிகாரிகளை நோக்கி எப்போது வேண்டுமானாலும் — நள்ளிரவு 2 மணிக்குக் கூட ஆய்வுக்கு வரக்கூடும் என்றும், இனி எந்தவொரு முறைகேடோ நிர்வாகச் சீர்கேடோ இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். சஞ்சய் காந்தி மருத்துவமனையில் தொடர்ந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, முன்னதாக ஆணையர் சைலேந்திர சிங்கும் அதிகாரிகளுடன் ஆலோசித்து மருத்துவமனை வசதிகளைச் சீரமைக்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
