யாரு சாமி நீ..? ஊர் வம்பு பேசி பேசியே 2 பங்களா வாங்கிய பெண்… கிசுகிசுக்களை பிசினஸ் ஆக்கிய பெண்ணின் பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

யாரு சாமி நீ..? ஊர் வம்பு பேசி பேசியே 2 பங்களா வாங்கிய பெண்… கிசுகிசுக்களை பிசினஸ் ஆக்கிய பெண்ணின் பகீர் பின்னணி..!!

Published

on

கொலம்பியாவைச் சேர்ந்த மிரியம் என்ற பெண், மற்றவர்களின் ரகசியங்கள் மற்றும் கிசுகிசுக்களை ஆதாரங்களுடன் சேகரித்து விற்பனை செய்வதையே தனது முழுநேரத் தொழிலாக மாற்றி சாதனை படைத்துள்ளார். சமூகத்தில் நடக்கும் சுவாரசியமான மற்றும் ரகசியமான தகவல்களைச் சேகரித்து, அவற்றை தேவையுள்ளவர்களிடம் பணத்திற்கு விற்று வருகிறார். இந்த விசித்திரமான தொழில் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவர் தற்போது இரண்டு சொந்த வீடுகளை வாங்கியுள்ளார் என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அவருடைய தொழிலின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருப்பது, திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பவர்களைப் பற்றிய தகவல்களாகும். அவ்வாறு ரகசிய உறவில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து, அவர்களின் இணையிடம் காட்டிக் கொடுக்காமல் இருக்க மிரியம் குறிப்பிட்ட தொகையைப் பணமாக வசூலிக்கிறார். இது தவிர, சமூகத்தில் உள்ள பல்வேறு நபர்களின் அந்தரங்கக் கதைகளையும், ரகசியத் திட்டங்களையும் சேகரித்து, அவற்றை அதிக விலைக்கு மற்றவர்களுக்கு விற்று லாபம் பார்க்கிறார்.

Advertisement

இந்த ரகசியத் தகவல்களைச் சேகரிப்பதற்காக மிரியம் மிகவும் சாதுரியமாகச் செயல்படுகிறார். அவர் எங்கு சென்றாலும் தனது கையில் எப்போதும் ஒரு குறிப்பேட்டை வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும், பொது இடங்களிலோ அல்லது மற்ற இடங்களிலோ மக்கள் பேசிக்கொள்வதை யாருக்கும் தெரியாமல் தனது செல்போனில் ரகசியமாகப் பதிவு செய்தும், தகவல்களை ஆதாரப்பூர்வமாகத் திரட்டி வருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in