CINEMA
பிகில் டூ டெல்லி..! விஜய் எங்கே போனாலும்… அவர் கூடவே இருக்கும் இந்த ‘ரகசிய’ இளைஞன்… யார் தெரியுமா..?!
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், முதல்முறையாக விஜய் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குச் சென்றார். அங்கு அவருக்குக் காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின், பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த டெல்லி பயணத்தின் போதும், விஜய் செல்லுமிடமெல்லாம் அவருடன் பயணிக்கும் ஒரு இளைஞர் யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்தது.
விஜய்யுடன் பயணித்த அந்த இளைஞன் ‘ஜெகதீஷ்’ என்பவராவார். இவர் விஜய்யின் தனிப்பட்ட சிகை அலங்கார நிபுணர் ஆவார். அண்மையில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற நிகழ்வின் போதும் இவரே விஜய்க்குச் சிகை அலங்காரம் செய்திருந்தார். 10-ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையிலிருந்த ஜெகதீஷ், இதற்கான படிப்புகளை முடித்து சலூன்களிலும் முன்னணி ஹேர் ஸ்டைலிஸ்டுகளிடம் உதவியாளராகவும் பணியாற்றித் தன் திறமையை வளர்த்துக் கொண்டவர்.
‘பிகில்’ திரைப்படத்தின் போது விஜய்யைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்ற இவர், அதனைத் தொடர்ந்து ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’, ‘வாரிசு’, ‘லியோ’, ‘தி கோட்’ மற்றும் ‘ஜன நாயகன்’ வரை கடந்த 8 ஆண்டுகளாக விஜய்யின் அனைத்துத் திரைப்படங்களிலும் பணிபுரிந்து வருகிறார். ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு முடிந்த தருணத்தில் விஜய் தன்னைப் பார்த்து “வெல்டன் தம்பி!” எனக் கூறிப் பாராட்டிய தருணமே தனது வாழ்வில் மிகவும் சிறப்பானது என்று ஜெகதீஷ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
