VIDEOS
சைகை செய்து கூப்பிட்ட வாலிபர்.. ஓடிவந்து தோளின் மேல் வந்து அமர்ந்த அணில்குட்டி.. மில்லியன் பார்வைகளை பெற்ற வீடியோ..
கிளி, பூனை, நாய் போன்றவற்றை வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதைப் பார்த்திருப்போம். அதேநேரம் அணிலை வீட்டில் வளர்ப்பவர்கள் ரொம்பவே அரிது. ஆனால் கிளி, பூனை, நாய்குட்டி எல்லாம் பழகினால் எப்படி பாசத்தோடு இருக்குமோ அதேபோலத்தான் அணிலும்! அதை மெய்ப்பிக்கும் வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இளைஞர் ஒருவர் தன் வீட்டில் செல்லமாக அணில்குட்டியை வளர்த்து வந்தார். அதற்கு செல்லமாக பெயர் வைத்தும் அழைத்து வந்தார். இந்நிலையில் தன வீட்டு மொட்டைமாடி மதிலின் மேல் நின்றுகொண்டிருந்த அணிலை வா என்பதுபோல் அந்த வாலிபர் சைகை செய்து கூப்பிட்டார்.
உடனே அந்த அணில்குட்டி பாய்ந்து அவர் உடல் மேல் அப்பிக் கொள்கிறது. குறித்த அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
