VIDEOS
14 லட்சம் பேர் வியந்த சிறுவனின் திறமை.. இவர் மாற்றுத்திறனாளி அல்ல… மாற்றும் திறனாளி.. பிரபல பாடகர்களே தோற்று விடும் குரல் வளம்..
ஒரு சின்னஞ் சிறுவனின் குரல் வளத்தில் 14 லட்சம் பேர் மயங்கி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காலில் சிறிய குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் சிறுவயதில் இருந்தே மிகவும் அபாரமாக பாடும் ஆற்றல் கொண்டவர். அவரது வீடு நிறைய பாடியே அவர் பெற்ற கோப்பைகள் நிறைந்து போய் உள்ளது. அவர் இப்போது மலரே மெளனமா பாடலைப்பாட அது இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. எஸ்.பி.பியின் குரலை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திவிட்டதாக அதில் தொடர்ந்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சிறுவனது குரல் மிகவும் காந்தக்குரலாக அனைவரையும் வசீகரிப்பதாக இருக்கிறது. இதோ நீங்களே சிறுவனின் குரலை கேளுங்களேன். உங்களையும் அறியாமல் மயங்கிப் போவீர்கள். இசையுலகில் இவருக்கென தனி இடம் நிச்சயமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த காணொலி உங்களுக்காக…
