LATEST NEWS
“நாட்டை காத்த வீரருக்கே இந்த அவலமா..?” நள்ளிரவு 1:30 மணி… நடுரோட்டில் கண்ணீர் விட்ட மேஜரின் மனைவி.. போக்குவரத்துத் துறையின் அராஜகத்தால் இணையத்தில் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்..!!
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடியபோது உடல் உறுப்புகளை இழந்து மாற்றுத்திறனாளியாக மாறிய ஓய்வுபெற்ற மேஜர் ஹேமேந்திர சிங், குர்கானில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகத் தவறாகச் சந்தேகிக்கப்பட்டுத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் முடிவு இயல்பாக வந்தபோதிலும், அவரும் அவரது மனைவியும் மகளும் நள்ளிரவு 1:30 மணி வரை சாலையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
बेटी कार में बैठी हुई है। पत्नी कार किनारे खड़े होकर रो रही है। ‘रिटायर मेजर’ हरियाणा पुलिस की करतूतों को झेल रहे हैं।
जम्मू-कश्मीर में आतंकियों से लड़ते हुए दिव्यांग हुए मेजर हेमेंद्र सिंह को गुरुग्राम में ट्रैफिक पुलिस ने शराब पीकर गाड़ी चलाने के शक में रोका। एल्कोहल टेस्ट… pic.twitter.com/CgIuuvGRl4— Mandeep RajBhar (@MandeepRajBhar9) August 16, 2026
இந்தச் சம்பவத்தால் அவரது மனைவி சாலையோரம் நின்று தொடர்ந்து அழுதுள்ளார், மகளும் காரிலேயே அமரவைக்கப்பட்டுள்ளார். இறுதியில் மனமுடைந்த மேஜர் தாமே டயல்-112 அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார்; உதவிக்குழு வருவதற்குள் அங்கிருந்த போக்குவரத்துக் காவல்துறையினர் அந்த இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.
