LATEST NEWS
“காக்கிச் சட்டைக்கு வந்த பேரவமானம்..!” படுக்கையில் SDM ஓட்டுநர்… பாத பூஜை செய்யும் போலீஸ்.. காவல்துறையை தலைகுனிய வைத்த வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் காவல்துறைச் சீருடையில் இருந்த தலைமைக் காவலர் ஒருவர், துணை மாவட்ட ஆட்சியரின் ஓட்டுநர் படுக்கையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது அவரது கால்களைத் தடவிவிடும் அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீருடை அணிந்த ஒரு காவலர் சக பணியாளருக்கோ அல்லது உயர் அதிகாரியின் ஓட்டுநருக்கோ இதுபோன்ற அடிமைத்தனமான செயல்களில் ஈடுபடுவதா என்று நெட்டிசன்கள் தங்களது கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
आजकल ड्राइवरों को भी इतना इज्जत इतना सम्मान बढ़ गया है कि पुलिस वाले भी Driver का पैर दबाने लग गए हैं फिर वर्दी पहनकर 😡
ये होता है क्या पुलिस की वर्दी का सम्मान जो पहन कर SDM के ड्राइवर जो है उसका आप पैर दवा सको, सिपाही क्या पैर दबाने के लिए नौकरी करता है?
ये घटना Kanpur SDM… pic.twitter.com/KkTfobSjqm— Subhajit Das (@SantaniSubhajit) August 15, 2026
காவல்துறைச் சீருடையின் மாண்பையும் அதன் சுயமரியாதையையும் காக்க வேண்டிய காவலர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் தலைகுனிவை ஏற்படுத்துவதோடு, அதிகார வர்க்கத்தின் முன்பு காவல்துறை எவ்வாறு மண்டியிடுகிறது என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. “ஒரு காவலர் தனது கடமையைச் செய்வது பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவா அல்லது ஓட்டுநர்களின் கால்களைப் பிடிப்பதற்காகவா?” என்ற நியாயமான கேள்வி தற்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளதுடன், இதற்கு உயர் அதிகாரிகள் என்ன பதில் அளிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் பரவலாகியுள்ளது.
