LATEST NEWS
“ஐயோ இவ்வளவு பெருசா..?!” வீட்டிற்குள் நுழைய முயன்ற ராட்சத மலைப்பாம்பு..! வெறும் கையால் மல்லுக்கட்டிய நபர்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
ஒரு பெரிய பாம்பைக் கண்டாலே பெரும்பாலானோர் அச்சமடைந்து தூர விலகிச் செல்வார்கள். ஆனால், உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் உள்ள ஹசன்பூர் காடிம் கிராமத்தில், வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் அருகே ஊர்ந்து வந்த ஒரு பிரம்மாண்டமான மலைப்பாம்பைக் கண்டு பதற்றமடைந்த போதிலும், கிராம மக்கள் அதை தைரியத்துடன் எதிர்த்துப் போராடித் தடுத்து நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது. வயல்வெளிகளில் இருந்து குடியிருப்புப் பகுதிக்கு நகர்ந்த அந்த மலைப்பாம்பு ஒரு வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, அங்கிருந்த ஒருவர் அதை தைரியமாகப் பிடித்து தடுத்தார்.
அந்தச் சம்பவம் தொடர்பான காணொளியில், ஒரு நபர் மலைப்பாம்பைப் பிடித்துக்கொண்டிருக்க, மற்றொருவர் அதைச் சாக்குப்பையில் அடைக்க காத்திருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த விசித்திர நிகழ்வைக் காண அவ்வழியே சென்றவர்களும் அக்கம் பக்கத்தினரும் பெருந்திரளாகக் கூடியதால் சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பாம்பின் பிரம்மாண்ட அளவைக் கண்டு பலர் பீதியடைந்த நிலையிலும், சிலர் தங்கள் கைபேசிகளில் அதை ஆர்வத்துடன் காணொளி எடுத்தனர்.
உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகளின் வருகைக்கு முன் கிராம மக்கள் அனைவரும் இணைந்து அந்தப் பாம்பை ஒரு மூலையில் சுற்றி வளைத்து வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்தனர். விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், கிராம மக்களின் உதவியுடன் பெரும் முயற்சிக்குப் பிறகு மலைப்பாம்பைப் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர், அந்தப் பாம்பு அதன் இயற்கை வாழ்விடமான ஹஸ்தினாபூர் வனவிலங்கு சரணாலயப் பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது.
