CRIME
“அவன லவ் பண்ணா பணம் தருவான்..!” மறுத்த கல்லூரி மாணவியை காட்டுக்கு கடத்திச் சென்று தோழிகள் செய்த கொடூரம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், ஒரு மாணவனுடன் பழகவும் காதலிக்கவும் மறுத்த கல்லூரி மாணவி ஒருவரை, அவரது தோழி உட்பட நான்கு மாணவிகள் ஆள்நடமாட்டமில்லாத காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5, 2026 அன்று இந்தத் துயரம் நடந்துள்ளது. பிபிஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் அந்த மாணவியை, அவரது நெருங்கிய தோழி உறவினர் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி ஸ்கூட்டரில் அழைத்துச் சென்று, ‘நகர் வன்’ என்ற காட்டுப் பகுதிக்கு அருகே விட்டுள்ளார். அங்கு ஏற்கனவே முகத்தை ஸ்கார்ஃப் மூலம் மூடிக்கொண்டு தயாராக இருந்த மற்ற மூன்று மாணவிகளுடன் சேர்ந்து, அந்த மாணவியைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
வாட்ஸ்அப்பில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த ஒரு மாணவனைக் காதலிக்குமாறும், அப்படிச் செய்தால் அவன் பணம் தருவான் என்றும் கூறி அந்த நான்கு மாணவிகளும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்கள் மாணவியை மரக்கட்டையால் அடித்தும், கால்களால் உதைத்தும், கழுத்தை நெரிக்க முயன்றும் சித்திரவதை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. “நீ பெரிய தலைவராகப் பார்க்கிறாயா, உன்னைப் புதைத்துவிடுவோம்” என்று அவர்கள் மிரட்டியுள்ளனர். இறுதியில், அந்த மாணவன் முன்னிலையில் வீடியோ காலில் மன்னிப்பு கேட்கக் கட்டாயப்படுத்தப்பட்ட பிறகே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சத்னா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஹன்ஸ்ராஜ் சிங் உறுதிப்படுத்தியுள்ளார், மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
