CRIME
“ஐயோ கடவுளே.. புகை வந்த அடுத்த நொடி..” பைக் ஓட்டுநர் எடுத்த ‘அந்த’ முடிவு.. அடுத்த சில நிமிடங்களில் சாம்பலான வண்டி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
சென்னை ஆலப்பாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மின்சார இருசக்கர வாகனம் ஒன்றில் இருந்து திடீரென புகை வந்ததைக் கவனித்து, ஓட்டுநர் உடனடியாகக் கீழே இறங்கியதால் நூலிழையில் உயிர் தப்பினார். அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து சற்று தூரம் விலகிச் சென்ற சில நிமிடங்களிலேயே, அந்த மின்சார வாகனம் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. ஓட்டுநரின் சமயோசிதமான புத்திசாலித்தனத்தினால், எவ்வித உயிர்ச் சேதமும் இன்றி அவர் இந்த விபத்தில் இருந்து பாதுகாப்பாகக் தப்பினார்.
இந்த எலெக்ட்ரிக் பைக் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்து முழுமையாகச் சாம்பலாகும் அதிர்ச்சிகரமான வீடியோ காட்சி அங்கிருந்தவர்களால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் தற்செயலாக வெளியாகி, தற்போது மிக வேகமாகப் பரவி வருகிறது. சென்னை போன்ற பரபரப்பான மாநகரச் சாலைகளில் சமீபகாலமாக மின்சார வாகனங்கள் திடீரெனத் தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, இத்தகைய இவி வாகனங்களைப் பயன்படுத்தும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், அவற்றின் பாதுகாப்புத் தரம் குறித்த விவாதங்களையும் மீண்டும் எழுப்பியுள்ளது.
