CRIME
“சார்.. என் பொண்டாட்டியை கொன்னுட்டேன்..” நைட்டோட நைட்டா போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள வந்து ஷாக் கொடுத்த புருஷன்… பக் பக் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோயி மாவட்டம், நகர காவல் எல்லைக்குட்பட்ட இஸ்லாம்நகர் டிலியா பகுதியில் புதன்கிழமை அதிகாலை ஒரு பெண் கூர்மையான ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த பெண் நக்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். காவல்துறையின் தகவல்படி, அப்பெண்ணின் கணவர் பர்வேஸ் என்பவரே இக்கொலையைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தனது மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தவறான தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகமே இந்த கொடூரக் கொலைக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவன் பர்வேஸ் மற்றும் மனைவி நக்மா ஆகிய இருவரும் கடந்த ஒன்றரை மாதங்களாக இஸ்லாம்நகர் டிலியா பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். நக்மா வேறு ஒருவருடன் பேசுவது அல்லது பழகி வருவது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்கனவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பர்வேஸ், கூர்மையான கத்தியால் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நக்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்திற்குப் பிறகு, குற்றஞ்சாட்டப்பட்ட கணவர் தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கொலை செய்த பிறகு, பர்வேஸ் நேரடியாக நகர காவல் நிலையத்திற்குச் சென்று தன் மனைவியைக் கொலை செய்த விபரத்தைக் கூறி காவல்துறையிடம் சரணடைந்தார். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தேவையான ஆதாரங்கள் மற்றும் தடயங்களைச் சேகரித்தனர். தற்போது காவல்துறையினர் கணவர் பர்வேஸைக் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்குக் காரணமான உண்மையான பின்னணி குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை தொடர்கிறது.
