CRIME
“லஞ்சம் கொடுத்தா கேஸ் க்ளோஸ்..?” ஜிஎஸ்டி அதிகாரி ரூமிற்குள் அரங்கேறிய ரகசிய டீல்… இடைத்தரகருடன் போலீஸாரின் மாஸ் ஆக்ஷன்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!
பெங்களூருவில் மத்திய ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் ஒருவர் ரூ.8 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, லோகாயுக்தா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். பெங்களூரு தெற்கு கமிஷனரேட்டின், தெற்கு பிரிவு-4-ல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் மோஹித் பிரதாப் சிங் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்ட அதிகாரி ஆவார். சையத் ஜமீர் என்ற தொழிலதிபருக்குச் சொந்தமான மத்திய ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகள் தொடர்பான விவகாரத்தில், அவர் மீது வந்த ஒரு போலிப் புகாரை முடித்து வைப்பதற்காக இந்த கண்காணிப்பாளர் ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில், பெங்களூரு நகர லோகாயுக்தா அதிகாரிகள் ஒரு ரகசியப் பொறி வைத்தனர். அதன்படி, கோரமங்களாவில் உள்ள கேந்திரிய சதன் அலுவலகத்தில் இருக்கும் கண்காணிப்பாளர் சிங்கின் சொந்த அறையிலேயே வைத்து, சல்மான் ஷேக் என்ற இடைத்தரகர் மூலமாகப் பணத்தைப் பெற்றபோது லோகாயுக்தா போலீஸார் அவரை அதிரடியாகப் பிடித்துள்ளனர். இந்த லஞ்சப் பணப் பரிமாற்றத்திற்கு உதவியாக இருந்த அந்த தனியார் இடைத்தரகர் சல்மானும் இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஊழல் சம்பவம் தொடர்பாக, திருத்தப்பட்ட 1988-ம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 7A-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
