LATEST NEWS
“அடப்பாவிகளா.. ஒரே ஸ்கூட்டரில் இத்தனை பேரா..?” 6 சீட்டர் காரையே ஓரங்கட்டிய ‘பாகுபலி’ வண்டி.. நெட்டிசன்களின் கண்ணையே சுழற்ற வைத்த வைரல் வீடியோ..!!
உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடால்-ஹால்த்வானி நெடுஞ்சாலையில், ஒரு 6 சீட்டர் காரையே மிஞ்சும் அளவுக்கு, ஒரே ஸ்கூட்டரில் ஏராளமான பயணிகளும் அடுக்கடுக்கான மூட்டை முடிச்சுகளும் ஆபத்தான முறையில் பயணித்த வீடியோ இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புஜியா காட் முதல் கத்கோதாம் வரையிலான மலைப்பாதை வழித்தடத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோவில், அந்த ‘பாகுபலி’ ஸ்கூட்டரில் துல்லியமாக எத்தனை பேர் அமர்ந்திருக்கிறார்கள் என்று எண்ண முடியாத அளவுக்குப் பொருட்களோடு சேர்த்து மனிதர்களும் ஆபத்தாகத் தொங்கிக் கொண்டு சென்றுள்ளனர்.
வளைவுகள் நிறைந்த பரபரப்பான நெடுஞ்சாலை மற்றும் மலைப்பாதைகளில் இதுபோன்ற அதிகப்படியான சுமையுடன் இருசக்கர வாகனங்களை ஓட்டுவது மிகப்பெரிய சாலை விபத்துகளுக்கு வழிவகுக்கும் எனப் போக்குவரத்து ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது அவர்களின் அத்தியாவசியத் தேவையாக இருந்தாலும் அல்லது கவனக்குறைவான சாகசமாக இருந்தாலும், பொதுச் சாலையில் இப்படிச் செய்வது தங்களின் உயிருக்கு மட்டுமின்றி சக வாகன ஓட்டிகளின் உயிருக்கும் ஆபத்தாய் முடியும் என்பதால், சாலைப் பாதுகாப்பில் எப்போதும் சமரசம் செய்யக் கூடாது எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் எச்சரித்து வருகின்றன
