LATEST NEWS
“அடப்பாவிகளா..! குட்டீஸோட ஸ்வீட்டையே அடிச்சுட்டீங்களா..?” சுதந்திரத் தினத்தில் பள்ளியில் அரங்கேறிய பகீர் கொள்ளை… தலைமை ஆசிரியரின் லீலைகளால் கொந்தளிக்கும் பெற்றோர்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், சுதந்திர தின விழாவிற்காகக் குழந்தைகளுக்கு விநியோகிக்கக் கொண்டுவரப்பட்ட 76 கிலோ லட்டுகள் திடீரெனக் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரத் திருநாளைக் கொண்டாட வந்த குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இனிப்புகள் கிடைக்காததால் அவர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்; மேலும், இந்த விவகாரம் குறித்துக் கேள்விப்பட்ட பெற்றோர் அதிகாரிகளிடம் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
यूपी: 15 अगस्त के कार्यक्रम में बच्चों को बाँटने के लिए लाए गए 76 किलो लड्डू गायब हो गए हैं। बच्चे और उनके माता-पिता गुस्साए हुए हैं।
स्कूल के टीचर ने बोला है की प्रधान के आदमियों ने स्कूल में आकर केवल अपने ही मिलने वाले लोगों को लड्डू बांट दिए।। मामला झाँसी का है। pic.twitter.com/IxMAwiHgJz— Madan Mohan Soni (@madanmohansoni) August 16, 2026
இந்தச் சம்பவம் குறித்துப் பள்ளியின் ஆசிரியர் தரப்பில் தெரிவிக்கையில், தலைமையாசிரியரின் ஆட்கள் பள்ளிக்கு வந்து தங்களுக்குத் தெரிந்த நபர்களுக்கு மட்டுமே அந்த லட்டுகளை விநியோகித்துச் சென்றதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்புகள் இதுபோன்று முறைகேடாகக் கையாளப்படுவது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.
