LATEST NEWS
“கைவிரித்த முதலமைச்சர் விஜய்…!”தவெகவிலும் இடம் இல்லை, அதிமுகவிலும் பதவியில்லை! தவிக்கும் 16 எம்.எல்.ஏ-க்கள்…!ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்த அந்த 3 முக்கிய புள்ளிகள்…!இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் அந்த அதிசயம்…!
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அண்மையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு (இபிஎஸ்) எதிராகப் போர்க்கொடி தூக்கி, விஜய்யின் அரசுக்கு ஆதரவளித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த இபிஎஸ் உடனடியாக அவர்களது கட்சிப் பதவிகளைப் பறித்தார். இந்தச் சூழலில், “கட்சியும் சின்னமும் உங்கள் அணிக்குத்தான் என்பதை நிரூபிக்காமல் அமைச்சரவையில் இடம் கொடுக்க முடியாது” என முதலமைச்சர் விஜய் கைவிரித்ததால், வேலுமணி அணி தற்போது தவிப்பில் ஆழ்ந்துள்ளது.
ஏற்கனவே விஜய்க்கு ஆதரவளித்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்துக் கட்சியில் இணைந்தனர். அவர்களைத் தொடர்ந்து அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவும் தனது பதவியை ராஜினாமா செய்து பரபரப்பைக் கூட்டியுள்ளார். தவெக ஆட்சியில் அமைச்சர் பதவி கிடைக்காத நிலையில், மீண்டும் அதிமுக பக்கமே திரும்பிவிடலாம் என்பதே எஸ்.பி.வேலுமணி அணியின் தற்போதைய திட்டமாக இருக்கிறது.
ஆனால், இபிஎஸ் தங்களை ஓரங்கட்டிவிடுவாரோ என்ற பயத்தில், அவர்கள் இபிஎஸ்-க்கு இன்று மாலைக்குள் முடிவைச் சொல்ல வேண்டும் என அதிரடி காலக்கெடு விதித்துள்ளனர்.பறிக்கப்பட்ட கட்சிப் பதவிகளை மீண்டும் தங்களுக்கே வழங்க வேண்டும்.சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய தனிக் குழு அமைக்க வேண்டும்.உடனடியாக அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்.கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகளை மீண்டும் சேர்க்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளுக்கு இபிஎஸ் உடன்படவில்லை என்றால், தாங்கள் அனைவரும் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு மொத்தமாக தவெகவில் இணைந்துவிடுவோம் என வேலுமணி தரப்பு எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றொரு புறம், இபிஎஸ் இந்த மிரட்டல்களுக்கு இறங்கி வருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகரிடம் இபிஎஸ் கடிதம் கொடுத்துள்ளார். மேலும், எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை ஏற்கக் கூடாது என்று தளவாய் சுந்தரம், இன்பதுரை உள்ளிட்ட இபிஎஸ் ஆதரவாளர்கள் சபாநாயகரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
அதிமுக தற்போது இரண்டு அணிகளாக உடைந்து கிடக்கும் நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது. எஸ்.பி.வேலுமணி அணி தங்களது நிபந்தனைகளைச் சாதித்து மீண்டும் அதிமுகவிலேயே அதிகாரத்தைக் கைப்பற்றுவார்களா, அல்லது இபிஎஸ் பிடி கொடுக்காத பட்சத்தில் தவெகவில் ஐக்கியமாவார்களா என்ற விவாதம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
