LATEST NEWS
வைகோ போட்ட அவசரக் கணக்கு…! அடியோடு சரிந்த மதிமுக கோட்டை… திமுகவின் சைலண்ட் ஆபரேஷனால் பரபரப்பு…!!
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் விலகி, தற்போதைய ஆளுங்கட்சியான தவெக பக்கம் சாய்ந்துவிட்ட நிலையில், மதிமுக மட்டுமே இன்னும் முந்தைய கூட்டணியில் நீடித்து வருகிறது.
இதற்கிடையே, கடந்த தேர்தலில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட தாங்கள் கடைசி நேரத்தில் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், சுயமரியாதையை இழந்து அக்கூட்டணியில் பயணித்தது துரதிர்ஷ்டவசமானது என்றும் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோர் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
இத்தகைய அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், தவெகவிற்கு ஆதரவு அளிப்பதா அல்லது கூட்டணியை முறிப்பதா என்பது குறித்து விவாதிக்க நேற்று மதிமுகவின் உயர்மட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஆனால், இந்த முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே பங்கேற்றார்.
இன்று நடக்கும் பொதுக்குழு கூட்டத்தையும் அவர்கள் புறக்கணிக்கக் கூடும் எனத் தெரிகிறது. இதனால், அதிருப்தியில் உள்ள அந்த 2 எம்.எல்.ஏ.க்களும் விரைவில் அதிகாரப்பூர்வமாகத் திமுகவில் இணையப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலைமைக்கு எதிராகத் தங்களது சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே கலகக் கொடி தூக்கியிருப்பது வைகோவிற்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
