Uncategorized
கனிமொழி எம்பி சொன்ன பதிலால் அதிருப்தி… உடனே களத்தில் குதித்து மாஸ் காட்டிய தவெக அமைச்சர் ஸ்ரீநாத்… மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு விடிவுகாலம்…!!
தூத்துக்குடி மாவட்டம் ஓடக்கரை பேருந்து நிறுத்தத்தில் விரைவுப் பேருந்துகள் நிற்காமல் செல்வதால் அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து, அந்த வழியே வந்த திமுக எம்பி கனிமொழியிடம் உள்ளூர் மக்கள் முறையிட்டபோது, “தங்கள் ஆட்சி இருந்திருந்தால் ஒரே வாரத்தில் சரிசெய்திருப்போம்” என அவர் மழுப்பலாகப் பதிலளித்தார். வாக்குக் கேட்டு வரும்போது வாக்குறுதி தந்துவிட்டு, இப்போது இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பேசுவதா என்று பொதுமக்கள் அவரிடம் அங்கேயே கேள்வி எழுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தச் சமூக வலைத்தள வீடியோவைக் கவனித்த புதிய தவெக அரசின் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், உடனடியாக ஓடக்கரை பகுதிக்கு நேரில் சென்று அதிரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டார். எம்பியிடம் கேள்வி எழுப்பிய பெண்ணைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தவர், அங்கிருந்த அரசுப் பேருந்தில் ஏறிச் சோதனை நடத்தி, இனிவரும் காலங்களில் அனைத்துப் பேருந்துகளும் ஓடக்கரை நிறுத்தத்தில் கட்டாயம் நின்று செல்ல வேண்டும் என அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதன் மூலம் பொதுமக்களின் நீண்ட காலப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு கிடைத்துள்ளது.
