LATEST NEWS
“நாங்க பாரபட்சம் இல்லாதவங்கதான்… ஆனா” வெங்கட நாராயணா நியமனம் முதல்வரின் விருப்பம்… தி.மு.க-வினரின் ‘திராவிட’ பாலிசியை கிழித்தெடுத்த ரத்தன் பண்டிட்…!!
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக K. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டதற்கு தி.மு.க-வினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு ரத்தன் பண்டிட் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தங்களை திராவிடர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் மொழி, சமூகம், மதம் ஆகியவற்றில் தங்களுக்கு எந்தவிதமான பாரபட்சமும் இல்லை என்று மேடைகளில் பேசி வருவதாகச் சுட்டிக்காட்டினார். அப்படி இருக்கும்போது, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவதில் என்ன தவறு இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கட நாராயணா, ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் வரலாற்றையும் மிக ஆழமாக அறிந்தவர் என்று ரத்தன் பண்டிட் பாராட்டியுள்ளார். இந்த நியமனம் என்பது முழுக்க முழுக்க முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்பமும் அதிகாரமும் சார்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தற்போதே அவரது தேர்வு குறித்து எந்தவொரு தேவையற்ற கேள்வியையும் எழுப்பக் கூடாது என்றும், அவரது செயல்பாடுகளை முழுமையாகப் பார்த்துவிட்டு அதற்குப் பிறகு தாராளமாக விமர்சனங்களை முன்வைக்கலாம் என்றும் தி.மு.க-வினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
