LATEST NEWS
என்ன அடுத்த பூகமம்மா…. பதவியே தூக்கி எறிந்து முக்கிய புள்ளிகள்…. ஒரே நாளில் அதிமுகவை உலுக்கிய கடிதம்…!!
அதிமுகவில் தற்போது மீண்டும் அதிருப்தி அலை வீசத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட புதிய கட்சிப் பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை என்று கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, பி. தங்கமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்களின் இந்த முடிவை விளக்கி, அவர்கள் விரைவில் இபிஎஸ்-க்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுத உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த சமரசத்திற்குப் பிறகு இவர்களுக்கு கட்சியில் பதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது வழங்கப்பட்டுள்ள இந்தப் பதவிகள் பெயரளவில் மட்டுமே பெரிய பதவிகளாக இருப்பதாகவும், எந்தவொரு முக்கிய முடிவெடுக்கும் அதிகாரமோ அல்லது நிர்வாக ரீதியான செல்வாக்கோ தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் இந்தத் தலைவர்கள் கருதுகின்றனர். உண்மையான அதிகாரம் இல்லாத இத்தகைய ‘அலங்காரப் பதவிகளை’ ஏற்பதில் தங்களுக்குச் சிறிதும் விருப்பமில்லை என்பதே இவர்களின் இந்த புறக்கணிப்புக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே தேர்தல் முடிவுகள் மற்றும் உள்கட்சி விவகாரங்களால் அதிமுகவுக்குள் பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. இந்நிலையில், கட்சியின் மிக முக்கியத் தலைவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை ஏற்க மறுப்பது கட்சித் தலைமைக்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மூத்த தலைவர்களின் இந்த முடிவால், அதிமுகவுக்குள் அதிருப்தி அலை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
